இந்தத் தலைப்பைப் படித்ததும் நாம் உடனே பள்ளி நாட்களையும், கல்லூரி நாட்களையும் துரத்திச் செல்ல ஆரம்பித்து விடுவோம்......
பதங்கமாதல் என்றால் என்ன நீ சொல்லு என்று என் ஆசிரியை என்னைக் கேட்டு எழுப்பிய நினைவுகளைத்தான் நான் அசை போட்டேன்.....
“திட நிலையில் இருக்கும் பொருளை வெப்பப்படுத்தினால், திரவநிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்கும், குளிர வைத்தால் மறுபடியும் நேரடியாக வாயு நிலையிலிருந்து திட நிலைக்கும் செல்வதைத்தான் நாம் பதங்கமாதல் என்று கூறுகின்றோம்” என்று கூறினேன் அழுத்தம் திருத்தமாய்........
தேர்வில் அதற்குண்டான பதிலை எழுதி மதிப்பெண்களைப் பெற்று கல்விப்பாடத்தில் தேர்வுப் பெற்று வாழ்க்கையில் கால் பங்கு முடித்த என்னுள் , இன்னும் இந்த “பதங்கமாதல்” ரீங்காரம் இட்டுக்கொண்டுதான் இருக்கின்றது....
நம் மனதினில் இது போன்ற பல விஷயங்கள் “பதங்கமாகி” கரைந்து போவதும் (காற்றில்) உண்டு......
அதற்கு கற்பனை வடிவம் கொடுத்து, திட நிலையில் நமக்குத் தேவைப் படும்போது உயிர்ப்பித்து அதனுடன் வாழ்ந்துக்கொண்டு இருப்பதும் உண்டு.....
இவ்வளவு காலங்களுக்குப் பின் எனக்கு “பதங்கமாதல்” என்பதனை வாழ்வியலுக்கு ஒப்புமை படுத்தியதில் , உண்மையான பொருள் இதுவாக இருக்கக்கூடுமோ என்று எண்ணத்தோன்றியது....
திடம் --------> திரவம் --------- > வாயு
(உடல் ----------ரசாயன வாழ்க்கை------- ஆன்மா)
இந்த உடலும் , உயிரும் (ஆன்மா) நிலையானது (இயல்பியல் பண்பு கொண்டது,)....
வெப்பநிலைக்கு ஏற்ப உடலும் , ஆன்மாவும் மாற்றம் கொள்ளும்.........
இந்த இடைப்பட்ட “திரவ நிலை” இவற்றின் பங்கு தான் அந்தப் பொருளின் தன்மையை நமக்குத் தரம் பிரித்துக் காண்பிக்கும்.....
அதன் நிறம், சுவை, மணம், தன்மை, குணம், திறன் (கரைதிறன்,
கொள்திறன்). இந்த திரவ நிலையில் தான் “ரசாயன மாற்றங்கள்” மிக எளிதாக நடைபெறும், அதன் விளைவுகளும், பயன்களும் அந்தப் பொருளின் தரம் கண்டு கொள்ள உதவும்......
இந்த திரவ நிலையைப் போல தான் நம் அனைவரின் உடலில் சேரும் ஆன்மா, வாழ்க்கை என்ற பயணத்தைத் தொடங்கி முடிக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள்,
அதன் பலன்கள்:
ரசாயனத்தில் “வினை ஊக்கி”யின் பங்கு அதிகம், நல்ல வினை யூக்கியும் , அதற்கு உண்டான தட்பவெப்பநிலையும் பதமாக, இதமாக சிறப்பாக இருந்திடின் கிடைக்கும் விளைவுகளும் மிகச்சிறப்பாக அமைந்திடும்.....
நம் வாழ்க்கையிலும் பல ரசாயன மாற்றத்திற்கு உதவும் வினையூக்கிகளை நாம் தரம் கண்டு இணைத்துக்கொள்ள வேண்டும், இல்லாது போனால்..........!!!!!
திரவங்களாய் நம்முள் ஓடும் அன்பு, பாசம், காதல், நேசம், கோபம், தாபம், துக்கம், மகிழ்ச்சி இதன் சரியான பங்களிப்பு இல்லாமல் போய்விடும்.........
”பதங்கமாதல்” என்னுள் பல சிந்தனைகளை தூண்டிவிட்டது, அதில் சில தங்களுடன் பகிர்ந்தேன், .............
பதங்கமாக உங்களுள் உறைந்த உங்கள் நினைவுகளை நீங்களும் அசை போட.........
sublimation: "solid state will convert to gaseous state when heating , and gaseous state to solid state when cooled without an intermediate liquid"
Hope all your sublime thoughts will come true one day successfully .........
பதங்கமாதல் என்றால் என்ன நீ சொல்லு என்று என் ஆசிரியை என்னைக் கேட்டு எழுப்பிய நினைவுகளைத்தான் நான் அசை போட்டேன்.....
“திட நிலையில் இருக்கும் பொருளை வெப்பப்படுத்தினால், திரவநிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்கும், குளிர வைத்தால் மறுபடியும் நேரடியாக வாயு நிலையிலிருந்து திட நிலைக்கும் செல்வதைத்தான் நாம் பதங்கமாதல் என்று கூறுகின்றோம்” என்று கூறினேன் அழுத்தம் திருத்தமாய்........
தேர்வில் அதற்குண்டான பதிலை எழுதி மதிப்பெண்களைப் பெற்று கல்விப்பாடத்தில் தேர்வுப் பெற்று வாழ்க்கையில் கால் பங்கு முடித்த என்னுள் , இன்னும் இந்த “பதங்கமாதல்” ரீங்காரம் இட்டுக்கொண்டுதான் இருக்கின்றது....
நம் மனதினில் இது போன்ற பல விஷயங்கள் “பதங்கமாகி” கரைந்து போவதும் (காற்றில்) உண்டு......
அதற்கு கற்பனை வடிவம் கொடுத்து, திட நிலையில் நமக்குத் தேவைப் படும்போது உயிர்ப்பித்து அதனுடன் வாழ்ந்துக்கொண்டு இருப்பதும் உண்டு.....
இவ்வளவு காலங்களுக்குப் பின் எனக்கு “பதங்கமாதல்” என்பதனை வாழ்வியலுக்கு ஒப்புமை படுத்தியதில் , உண்மையான பொருள் இதுவாக இருக்கக்கூடுமோ என்று எண்ணத்தோன்றியது....
திடம் --------> திரவம் --------- > வாயு
(உடல் ----------ரசாயன வாழ்க்கை------- ஆன்மா)
இந்த உடலும் , உயிரும் (ஆன்மா) நிலையானது (இயல்பியல் பண்பு கொண்டது,)....
வெப்பநிலைக்கு ஏற்ப உடலும் , ஆன்மாவும் மாற்றம் கொள்ளும்.........
இந்த இடைப்பட்ட “திரவ நிலை” இவற்றின் பங்கு தான் அந்தப் பொருளின் தன்மையை நமக்குத் தரம் பிரித்துக் காண்பிக்கும்.....
அதன் நிறம், சுவை, மணம், தன்மை, குணம், திறன் (கரைதிறன்,
கொள்திறன்). இந்த திரவ நிலையில் தான் “ரசாயன மாற்றங்கள்” மிக எளிதாக நடைபெறும், அதன் விளைவுகளும், பயன்களும் அந்தப் பொருளின் தரம் கண்டு கொள்ள உதவும்......
இந்த திரவ நிலையைப் போல தான் நம் அனைவரின் உடலில் சேரும் ஆன்மா, வாழ்க்கை என்ற பயணத்தைத் தொடங்கி முடிக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள்,
அதன் பலன்கள்:
ரசாயனத்தில் “வினை ஊக்கி”யின் பங்கு அதிகம், நல்ல வினை யூக்கியும் , அதற்கு உண்டான தட்பவெப்பநிலையும் பதமாக, இதமாக சிறப்பாக இருந்திடின் கிடைக்கும் விளைவுகளும் மிகச்சிறப்பாக அமைந்திடும்.....
நம் வாழ்க்கையிலும் பல ரசாயன மாற்றத்திற்கு உதவும் வினையூக்கிகளை நாம் தரம் கண்டு இணைத்துக்கொள்ள வேண்டும், இல்லாது போனால்..........!!!!!
திரவங்களாய் நம்முள் ஓடும் அன்பு, பாசம், காதல், நேசம், கோபம், தாபம், துக்கம், மகிழ்ச்சி இதன் சரியான பங்களிப்பு இல்லாமல் போய்விடும்.........
”பதங்கமாதல்” என்னுள் பல சிந்தனைகளை தூண்டிவிட்டது, அதில் சில தங்களுடன் பகிர்ந்தேன், .............
பதங்கமாக உங்களுள் உறைந்த உங்கள் நினைவுகளை நீங்களும் அசை போட.........
sublimation: "solid state will convert to gaseous state when heating , and gaseous state to solid state when cooled without an intermediate liquid"
Hope all your sublime thoughts will come true one day successfully .........