Monday, June 27, 2011

"தோழி”

                                   “அன்புத்தோழி”

எப்போது தோழியே......
என்னுள் நீ புகுந்து.....
என்னை நான் மறந்து....
எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல்.....
என்றும் உன் நினைவுகளுடன்.....
எண் எழுத்து மறந்து போனது.....
என்றேனும் என் நிலைமை நின்னுள் தொடர்வது.....
எப்போது தோழியே.....

Tuesday, June 7, 2011

.” எ ன் னு ள் நா ன்”


என்ன ஒரு பிரம்மாண்ட படைப்பு நான்....
என்னால் முடிந்தவரை உன்னைத்தொட முயற்சித்தேன்...

என்னைப்போல் இன்னொருவனாஎன்று நோக்குமுன்னே...
என்னை முழுதுமாக மறைத்து ஆட்கொண்டாய்....
...
என்னெதிரில் இருப்பவைகளை மாயையாக்கி....
எனக்குள் பல கேள்விகளை உருவாக்கி....

என்னுள் இருந்த கர்வத்தைத் தகர்த்து....
எல்லாம் நீயென உணரவைத்து....

என்ன நடந்தாலும் கவலைப்படாமல் மலையென...
எந்தவித பற்றையும் தூசென உதறித்துறக்க இருந்த....

எனக்கு மறுபடியும் வாழ்வை அளித்து....
என்னுள் அறிவுத் தீ மூட்டி....

என்னை ஆட்கொண்ட பின்பும் ஏன்....
என்னை அனைத்திற்கும் ஆசைப்பட வைக்கின்றாய்....