Friday, October 7, 2011

தாய்மை

பத்து மாதங்கள் அவளுக்காக
எனக்குப் பிடித்த பல சின்ன சின்ன ஆசைகளைத்  தவிர்த்து....
குறையில்லாமல் நிறைவுடன் செய்து வந்த நான்.....
அவள் என் கர்பக்காவலிலிருந்து....
விடுபட்டு சுதந்திரமாய் வெளிவந்த நேரம்....
என்னுள் ஒரு ஊற்று....
பெருக்கெடுத்ததை நன்கு உணர்ந்தேன்.....

அவளின் பிஞ்சு விரல்களின் ஸ்பரிஸத்தால்.....
என்னுள் இருந்த “நான்” என்ற அகந்தை அகன்றுபோனது.....
என் இளம் வயது நினைவுகளான.....
என் தாயின் விரல்களை இறுகப்பிடித்த தருணங்கள் வந்து போயின.....

என்னை அறியாமல் என் கண்களின் ஓரங்களில் நீர் திவிலைகள்.....
என்னுள் அன்றுதான் உறைத்தது .....
“ஆனந்தக் கண்ணீர்” என்பது இது தான் என்பதனை.....
என் நினைவுகள் பின்னோக்கியும் முன்னோக்கியும் பயணித்த நேரத்தில்......
அன்று ஜன்னல் வழியே நான் கண்ட மறக்க முடியாத் காட்சி ஒன்று......
“ஒரு காகம் தன் குஞ்சிற்கு இரை ஊட்டிக்கொண்டு இருந்தது, சிறிது நேரம் கழித்து குஞ்சுக் காகம் “காகா” என்று கரைய, தாய் காகம் சலிப்பில்லாமல் அதற்கு இரை கொடுத்துக்கொண்டே இருந்தது, இந்தக் காட்சி வெகு நேரம் தொடர்ந்தது, எனக்குள் இருந்த “பொறுமை” தொலையத் தொடங்கியது, காகம் என்றால் கரையத்தானே செய்யும் எதற்கு இந்த காகம் இப்படி செய்துக் கொண்டே இருக்கின்றது என்று சற்று எரிச்சலும் தொற்றிக் கொண்டது என்னுள்”.....
இன்று அந்த காட்சியின் பொருள் உறைத்தது என்னுள் , நானும் கரைந்தேன் என் மகள் கரைய (அழ) ஆரம்பித்தவுடன், நானும் தயார் ஆனேன்  அவள் அழுகையை நிறுத்த சராசரி தாயாராய்......

இது தான் தாய்மையோ.....!!!
எங்கோ ஒரு பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது “அழகிய கண்ணே”

 “யான் கொண்ட இன்ப உணர்வு பெறுக அனைவரும் ”


No comments:

Post a Comment