Monday, September 17, 2012

“ உயிர் ஜனித்து வா”

நீண்ட வாழ்க்கை உன்னுடன் களித்திட்ட 

காலத்தையும்....!

நீங்காத கனவுகளில் உளரிய காலத்தையும்....!



நீர் தெளித்துக் களித்து விளையாடிய காலத்தையும்......!

நீ பொய்க்கோபம் கொண்டு கடிந்திட்ட 





காலத்தையும்....!

நீ மடி சுமந்து எங்களை மகிழ்வித்த காலத்தையும்....!

நீ இன்றி நாங்கள் தவித்திட்ட காலத்தையும் சுமந்து....!

நீங்காத நினைவாய் எங்களுள் புதைந்திட்ட’ 





தந்தையே....!

நீ மடி சாய்ந்து நாங்கள் கூறும் கதைகள் கேட்க.....!

நீ மீண்டும் உயிர் ஜனித்து வா....!!!!

No comments:

Post a Comment