அன்பு பொழிவதில் அன்னை ஆனாய் நீ....
ஆதரவு காட்டுவதில் தந்தை ஆனாய் நீ....
இதமாய்ப் பழகுவதில் உடன்பிறப்பானாய் நீ....
ஈடில்லா பாசத்தால் குழந்தை ஆனாய் நீ....
உள்ளம் கவர்வதில் கள்வன் ஆனாய் நீ....
ஊக்கம் அளிப்பதில் ஆசான் ஆனாய் நீ....
எளிதினில் பழகுவதில் நண்பன் ஆனாய் நீ....
ஏளனம் செய்வதில் எதிரி ஆனாய் நீ....
ஐக்கியம் ஆவதில் பக்தன் ஆனாய் நீ....
ஒருமைப்பாட்டில் தலைவன் ஆனாய் நீ....
ஓவியமாய் மிளிவதில் கலைஞன் ஆனாய் நீ.....
ஔடதமாய் காப்பதில் இறைவன் ஆனாய் நீ.....
அஃதும் இஃதுமாய் கலந்திருப்பவன் நீ....
உயிருடன் ஆய்தமாய் காப்பவன் நீ....
No comments:
Post a Comment