Friday, May 30, 2014

”விடியல்களைத் தேடி”

விடியலுக்காகத் தங்களை மாய்த்துக்கொண்ட....
விடுதலைப் போராட்ட வீரர்களின்.....

விடா முயற்சியினால் மீட்கப்பட்ட நாம்....
விடாக்கொண்டர்களால் சின்னாபின்னப்பட்டு....

விடியா மூஞ்சிகளாய் விலையாகிப்போனோம்....
விடுபட முடியாமல் வீணாகியும் போனோம்....

விடியல் மீண்டும் கிடைத்திடுமா....?
விடை தேடும் அறியாமையினில் நாம் அனைவரும்....

விடிந்தால் விலக்க முடியாத தேர்வு....

விதி வழி என்று வீணான பேச்சை விரட்டி அடித்திட....
விழிப்புடன் பதிப்போம் நம் முத்திரைகளை....

விழி மூடிட முடியாமல் தொலைத்திட்ட .....

விலைமதிக்க முடியாத நித்திரையை நிறைவாய்ப் பெற்றிட....

No comments:

Post a Comment