நயமாய் கடிந்து....
நக்கலாய் இடித்து....
நச்சென நடித்து.....
நமக்காகத் துடித்து....
நட்பை நன்றாக மதித்து....
நடைமுறைகளை உணரவைத்து....
நலலவைகளைப் பகிர்ந்து....
நயவஞ்சகத்தை அறிந்து....
நன்நடத்தைகளை வளர்த்து....
நடிப்பவர்களை புரியவைத்து....
நலிந்த போது தோள் கொடுத்து....
நம்பிக்கையை விதைத்து....
நரை முடி முளைத்த பின்பும்....
நழுவிடாமல் நட்புக்கரம் நீட்டுபவள்.....
No comments:
Post a Comment