பெண்களின் சிறப்புப் பண்புகளில் மிக முக்கியமான ஒன்று பொறுமை....
அவளைப் பெருமை சேர்க்கும் பண்பும் அது தான் என்றால் மிகையாகாது.....
எந்த பிரச்சனைகள் என்றாலும் அதனைப் பொறுமையுடன் ஆராய்ந்து , அதற்கான வழிமுறைகளைத் தேடி தீர்வுகாண்பவளும் பெண் தான்......
(பிரச்சனையே பெண் தான் என்பவர்களுக்கு தெரியும் அந்த பிரச்சனைக்குக் காரணமும், அதனை தீர்ப்பவளும் பெண் தான் என்பது).....
அதனால் தான், அந்த காலம் தொட்டே! பெண்களுக்கென்று சில வேலைகளை நியமித்து இருந்தார்கள் நம் முன்னோர்கள் காரணம் அவளின் உடல் வாகும், குணாதிசயங்களும்....
குழந்தைகளின் அன்றாடத் தேவைகளைத் தாயை விட யாரால் செய்துவிட முடியும் , குளிப்பாட்டி, சுத்தம் செய்து,உணவைப் புகட்டி, அறிவு வளர்த்து, விருப்பு வெறுப்புக்களை உணர்ந்து அதன் படி நல்ல ஆரோக்கியத்துடன் (உடல், மனம்) வளர்த்திட .....
தன் மக்களுக்குச் செய்யும் அதே தாய் (தாய்மை) மற்ற குழந்தைகள், உறவினர், சுற்றத்தார், முதியவர், இயலாமல் இருப்போர் போன்றவர்களுக்கும் செய்வதும் இலகுவாகிவிடுகின்றது.....
ஒரு பெண்ணால் பல அரிய வேலைகள், செயல்கள், தொழில்கள் என்று பல வகையிலும் மிளிரும் தன்மை இருந்தாலும், பெண்கள் பெரிதும் விரும்பி ஏற்கும் வேலை ஆசிரியைப் பணியும், செவிலிப் பணியும் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருந்துவிட முடியாது எனபது என் உறுதியான எண்ணம்....
ஆசிரியைப் பணிக்கு “கல்வி அறிவு” மிகவும் அவசியமான ஒன்று
(இன்று ப்ளஸ் டூ ஃபெயில் ஆனாலும் அடெம்ண்ட் மூலம் பாஸ் செய்து “டீசர்ஸ் ட்ரெய்னிங்”இல் அதிக பணம் கொடுத்துப் பணம் சேர்த்து , பெண்ணை அரசாங்க வேலைக்கு தயார் படுத்தும் காலம்.... பாவம் மாணவர்கள்)
அனைத்து சமூகத்தினர், படிப்பறிவு குறைந்த பலரால் ஆசிரியைப் பணியைச் சிறப்புடன் செய்துவிட முடியாது எனபதினால் பெரும்பாலும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்த பணி “செவிலியர்” பணி......
“செவிலியர்” பணிக்கும் அடிப்படை படிப்பு இருந்தாலும் , செயல் முறை அறிவு அவர்களுக்கு அதிகம் கற்றுத்தரப்படும், அவசியமும் கூட..... அந்த செயல் முறையை வைத்துத்தான் அவர்களின் தரம், பதவி உயர்வு கணக்கெடுக்கப் படும்.....
செவிலியர் செவிலித்தாயிலிருந்து மருவி வந்த பெயராக இருந்திருக்கலாமோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு....
ஆங்கிலத்தில் “நர்ஸ்” என்று பொதுவாக அழைக்கப்படும் வார்த்தை (பராமரிக்கும் பணியை செய்பவள் (குழந்தை முதல் முதியவர்வரை) )....
ஒருவரை ஒருவர் விளித்துக் கூற “சிஸ்டர்” என்பது வசதியாக இருந்தமையால், அந்தப் பெயர் இன்று பொதுப்பெயராயிற்று.....
அப்பாடா, இப்போது தான் கட்டுரையின் நடுப்பகுதிக்கு வர முடிந்தது, முகவுரையை முடித்து.....
நான் சிறுவயதாக இருந்த போது வியந்த பணியில், இந்த “நர்ஸ்” பணியும் ஒன்று....
எவ்வாறு இவள் ஒருத்தியே, அத்தனை நோயாளிகளின் குறைகளைக் கேட்டு அதனை பக்குவமாக அவர்களுக்குப் புரியவைத்து, மருத்துவரின் ஆலோசனை, அறிவுரையை அவர்களுக்கு உணர்த்தி, ஊசியை அவர்களுக்கு வலி தெரியாமல் பேச்சில் திசை திருப்பி, சிரித்த முகத்துடன் அனைவரையும் வழி அனுப்ப முடிகின்றது
நான் கூறியது 25 வருடங்களுக்கு முன் என்பதையும் மறந்துவிட வேண்டாம்)
அவர்களால் விதைக்கப்பட்ட விதையோ என்னுள் மருத்துவம் படிக்கத் தூண்டியது (ஐயோ! நீங்க டாக்டரா என்று வாய் பிளக்க வேண்டாம்)....
அந்த “சகிப்புத்தன்மை” என்னுள் பல மாற்றங்களை உருவாக்கியது....
என்னுள் உள்ள மென்மையும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பாங்கும், எதிரே இருப்பவர்களின் மன ஓட்டத்தை அறிந்து அதன் படி பேசும் ஆற்றலும், முடியாமல் வருந்தும் எந்த உயிரையும் மதிக்கும் பண்பு என்று எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம்....
மேல் படிப்பு படித்து மருத்துவம் பார்க்க ஒரு இடம் அமைத்து அவரால் சிறப்பாகப் பணி செய்துவிட முடியுமா....? ( ஒரு ஆசிரியர், வக்கீல் இப்படிப் பல தொழில் தனி ஒரு மனிதனால் முடியும்).....
பணியில் அவர்கள் காட்டும் அக்கறை, அந்த பொதுநல எண்ணம், சகிப்புத்தன்மை, முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் சேவை செய்யும் பாங்கு யாருக்கு வரும்....
(இப்போதும் சில மேலே கூறிய தகுதிகளில் ஒன்று கூட தம்முள் வளர்த்துக்கொள்ள முயலாமல் பணி என்ற பெயரில் “மனி” மட்டும் ஈட்டுவதில் குறியாக இருப்பவரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்)
நாம் நல்ல மனிதர்களைக் கணக்கில் கொள்வோமே!
சரி...! தன்னை பிறருக்காகவே அர்பணித்து வாழ்க்கையை நடத்தும் அவர்களுக்கு சமூகம் கொடுக்கும் அந்தஸ்து தான் என்ன..... ?
நினைக்கவே அருவெறுப்பாக இருக்கின்றது, விலைமாதுவைவிட அவர்களை , அவர்களின் நடத்தைகளுக்கு விமர்சனம் கொடுத்து அவர்களை முத்திரைக்குத்தி அவமானப்படுத்துவது.....
ஒரு நல்ல அங்கீகாரம் கொடுக்க வேண்டிய சமூகம், ஏன் அவர்களில் சிலரின் குறைகளை மிகைப்படுத்தி ஒட்டு மொத்த “செவிலியர்களை” செவிகேட்க முடியாத அளவிற்கு விமர்சனம் செய்கின்றது....
“செய்யும் தொழிலே தெய்வம்” என்பதனை கருத்தினில் கொண்டு, அனைவரும் அவர்கள் செய்யும் பணிக்கு உண்டான மதிப்பையையும், அங்கீகாரத்தையும் தந்து தாழ்மை படுத்தும் எண்ணங்களை சலவை செய்து தூய எண்ணங்களுடன் வாழவேண்டும்......
அவர்களின் குறைகளைத் தவிர்த்து நிறைகளைப் போற்றிப் பாதுகாப்போம்,.....
வளரும் நம் சிந்தனையும், நாடும்....
மலரும் அவர்கள் அனைவரின் மனங்களும், முகங்களும்...